×

புழல் சிறைச்சாலையில் பெண் கைதி உயிரிழப்பு

புழல்: புழல் பெண்கள் சிறையில் தண்டனை கைதியாக இருந்த பெண், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். புழல் பெண்கள் தனி சிறையில் சுமார் 200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இங்கு, மாதவரம் வி.எஸ்.மணி நகர் பகுதியை சேர்ந்த வேதமேரி (69) என்பவர், வரதட்சணை கொடுமை சட்டத்தில், மாதவரம் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு, கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் புழல் பெண்கள் தனி சிறையில் தண்டனை கைதியாக இருந்து வந்தார்.

இவர், சர்க்கரை நோயால் பாதிப்பட்டிருந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற புழல் போலீசார், வேதமேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புழல் சிறைச்சாலையில் பெண் கைதி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Puzhal Jail ,Puzhal ,Puzhal Women's Jail ,Puzhal Women's Separate Jail ,Vedameri ,V.S.Mani Nagar ,Madhavaram ,
× RELATED புழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்..!!